சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விமானப் படை காவலாளி உயிரிழந்தார்.
சூலூர் அருகே விமானப் படை தளத்தில் ஒப்பந்த முறையில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் தாமஸ் (55). இவர் வேலை முடிந்து சைக்கிளில் காங்கேயம்பாளையம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது சூலூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், தாமஸ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.