காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை காட்டெ ருமை தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை காட்டெ ருமை தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சின்னக்கல்லாறு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள வனத்தில் இருந்து ஒரு காட்டெருமை தோட்டத்துக்குள் வந்தது. அப் பகுதியில் இருந்தவர்களைப் பார்த்து மிரண்டு  ஓடியது. அப்போது எதிரே வந்த  கிருஷ்ணசாமி (41) என்ற தொழிலாளியைத் தாக்கியது. 
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com