பயனீர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை, கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தொடக்கிவைத்தார். நிர்வாக அலுவலர் பத்மலோசனா முன்னிலை வகித்தார். 
தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் சார்பில் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர் அருண்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் முகாமில் கணினியியல், பொருளாதாரவியல், கணிதவியல் பிரிவுகளில் படிக்கும் சுமார் 273 மாணவ, மாணவிகளிடம் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் எஸ்.கிருஷ்ணவேணி, எஸ்.சுபாஷிணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com