பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரதீஷ் (33). சிறப்புக் காவல் படை வீரர். இவரது உறவினர் விஜய்குமார் (31). எல்லைப் பாதுகாப்புப் படை வீரர். இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு அங்கலக்குறிச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே அங்கலக்குறிச்சி நோக்கி நா.மூ.சுங்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர் ரஞ்சித்குமார்(24) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இரு வாகனங்களும் வேடசெந்தூர் அருகே சென்றபோது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த மூவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, ஆழியாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.