கல்லூரி மாணவியின் விடியோவை முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது

கோவையில் கல்லூரி மாணவியின் விடியோவை முகநூலில் வெளியிட்ட இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோவையில் கல்லூரி மாணவியின் விடியோவை முகநூலில் வெளியிட்ட இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (23). இவர், ராமநாதபுரம் பகுதியில் வசித்தபோது பொறியியல் கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இளைஞரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு மாணவி பிரிந்துள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் காதலித்தபோது எடுத்த விடியோ படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மனோஜ்குமாரின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com