மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 14) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, சென்னனூர், ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, பூண்டி, சிறுவாணி, குளத்துப்பாளையம், தாளியூர், சுண்டப்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், தீத்திப்பாளையம், காளம்பாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம்.