விலைவாசி உயர்வு, ரேஷன் மானியம் ரத்து போன்றவற்றைக் கண்டித்து கோவையில் சிஐடியூ அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கை. அதன் விளைவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பொறுப்புச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினார்.
மேலும், விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் காய்கறி மாலை அணிந்தும், எரிவாயு உருளையை தலையில் சுமந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வேலுசாமி, எஸ்.மூர்த்தி, கே.மனோகரன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.