சதுரங்கப் போட்டி: கோவனூர் அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி

கோவை வடக்கு குறுமைய அளவிலான சதுரங்கப் போட்டியில் கோவனூர் அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

கோவை வடக்கு குறுமைய அளவிலான சதுரங்கப் போட்டியில் கோவனூர் அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
மத்தம்பாளையத்திலுள்ள சாய் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில், கோவனூர் அரசு நடுநிலைப் பள்ளி  ஐந்தாம் வகுப்பு மாணவிகள் கே.அகல்யா முதலிடத்திலும்,  டி.சக்திதேவி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சாய் வித்யா நிகேதன் பள்ளித் தாளாளர் ரமேஷ் பரிசுகளை வழங்கினார்.    
வெற்றி பெற்ற மாணவிகளை அரசு நடுநிலைப் பள்ளி  தலைமை ஆசிரியை எஸ்.யோகேஸ்வரி,  ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com