மலைப் பாம்பு கடித்து இளைஞர் காயம்

கோவை மாவட்டம்,   மதுக்கரையை அடுத்த  மரப்பாலம் பகுதியில் மலைப் பாம்பு கடித்ததில் இளைஞர் காயமடைந்தார்.

கோவை மாவட்டம்,   மதுக்கரையை அடுத்த  மரப்பாலம் பகுதியில் மலைப் பாம்பு கடித்ததில் இளைஞர் காயமடைந்தார்.
 மதுக்கரையை அடுத்த  மரப்பாலத்தில் அண்ணா நகர் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மலைப் பாம்பு  சிவா(21) என்பவரைக் கடித்தது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள் அந்த மலைப் பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  8 அடி நீளமுள்ள இந்த மலைப் பாம்பு அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
மலைப் பாம்பு கடித்ததில் காயமடைந்த சிவா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com