திரையரங்கு மீது கல்வீச்சு: இருவர் கைது

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள திரையரங்கு மீது கல்வீசித் தாக்கியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள திரையரங்கு மீது கல்வீசித் தாக்கியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காட்டூர் போலீஸார் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் டி.ஜெயபால் (22), எஸ்.சந்தோஷ்குமார் (25). நண்பர்களான இருவரும் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், ஜெயபாலும், சந்தோஷ்குமாரும் ராம்நகரில் உள்ள திரையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளனர்.  அங்கு அவர்கள் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
  இதைத்தொடர்ந்து,  ஊழியர்கள் அவர்களைத் திரையரங்கில் இருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபாலும், சந்தோஷ்குமாரும் திரையரங்கின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினராம்.
 இதில், திரையங்கின் முன்புறக் கண்ணாடி உடைந்துள்ளது.
 இதுகுறித்து, காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயபால், சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com