சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பழுதடைந்த நிலையில் உள்ள கோட்டூர் சாலை, மாக்கினாம்பட்டி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், சூளேஸ்வரன்பட்டி மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி சேதமாகியுள்ளதை சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், 4-ஆவது வார்டில் உள்ள கிணற்றை சுத்தப்படுத்தி மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com