சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பழுதடைந்த நிலையில் உள்ள கோட்டூர் சாலை, மாக்கினாம்பட்டி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், சூளேஸ்வரன்பட்டி மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி சேதமாகியுள்ளதை சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், 4-ஆவது வார்டில் உள்ள கிணற்றை சுத்தப்படுத்தி மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.