பழங்குடியினப் பெண், குழந்தை சாவு

பிரசவத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினப் பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

பிரசவத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினப் பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர்.
வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லையில் உள்ளது இடமலையாறு செட்டில்மென்ட். இப்பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலம்மாள் (23). பழங்குடியினப் பெண்ணான இவருக்கு ஜூன் 17-ஆம் இரவு பிரசவ வலி அதிகமானதையடுத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஞ்சலம்மாளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஞ்சலம்மாளும், குழந்தையும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அஞ்சலம்மாளின் சகோதரர ராஜ் அளித்த புகாரின்பேரில் வால்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com