காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை விழா கோவையில் நடைபெற்றது.
இதையொட்டி, கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் பவனில் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் கட்சிக் கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், நிர்வாகிகள் எம்.என்.கந்தசாமி, மகேஷ்குமார், காலனி வெங்கடாசலம், கோவை செல்வம், கே.பி.எஸ்.மணி, சந்தோஷ், ஸ்ரீதர், காயத்ரி, ஹேமா ஜெயசீலன், பட்டம்மாள், சௌந்தர்குமார், உமாபதி, பாலசந்தர், குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் மதுக்கரை மார்க்கெட்டில் தொழிலாளர் யூனியன் மாநில துணைத் தலைவர் சிவராஜ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.சக்திவேல், மாவட்ட முன்னாள் தலைவர் ஏ.ஆர்.சின்னையன், தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், புறநகர் மாவட்டத் தலைவர் தேவிகா கோவிந்தராஜ், பொதுக் குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம், நகரச் செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.