கல் குவாரியில் பெண் சடலம்

சூலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத கல் குவாரியில் மிதந்த பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

சூலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத கல் குவாரியில் மிதந்த பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
 சூலூர் அருகே பட்டணத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இது தற்போது பயன்பாட்டில் இல்லை. இந்தக் கல் குவாரித் தண்ணீரில் பெண்ணின் சடலம் மிதப்பதாக சூலூர் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார், அங்கு சென்று பெண்ணின் சடலத்தை க் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
 கல் குவாரியில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் பயன்யடுத்தாத நிலையில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இந்தக் கல் குவாரிகளைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com