12-ஆம் வகுப்பு மாணவிகள் மாயம்

சூலூர் அருகே, தேர்வெழுதச் சென்ற 12-ஆம் வகுப்பு மாணவிகள் மாயமாகினர்.

சூலூர் அருகே, தேர்வெழுதச் சென்ற 12-ஆம் வகுப்பு மாணவிகள் மாயமாகினர்.
சூலூர் அருகே, கண்ணம்பாளையம், சர்வ மத காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் காயத்ரி (17). ஏ.வி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டன் மகள் சித்ரா (17). இவர்கள் இருவரும் கண்ணம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வெழுத பள்ளிக்கு வியாழக்கிழமை இருவரும் சென்றுள்ளனர். ஆனால், மதியம் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததையடுத்து, சூலுர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவிகளைத் தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com