இன்று பில்லூர் குடிநீர் நிறுத்தம்

அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒருசில பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒருசில பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில் பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் அவசரப் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (மே 19) மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் குடிநீர் திட்டத்தின்கீழ், இயக்கப்படும் 4 பிரதான மின் மோட்டார்களில் 3 பிரதான மின் மோட்டார்கள் நிறுத்தப்படுகின்றன.
இதன்படி, கோவை மாநகராட்சி (பகுதி), பல்லடம் நகராட்சி, 14 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர், பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com