கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் சபரிகுமரன், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த மாணவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழில் 94, ஆங்கிலத்தில் 95, கணிதத்தில் 98, அறிவியலில் 86,சமூக அறிவியலில் 96. இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஜி.லலித்குமார், ஆர்.உதயா ஆகியோர் தலா 489 மதிப்பெண்களும், எஸ்.கற்பககணேசன் 488 மதிப்பெண்களும், வி.இமயவரம்பன் 483 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 4 பேர் அறிவியலிலும், 13 பேர் சமூக அறிவியலிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் சுவாமி தத்பிரபானந்தர், தலைமை ஆசிரியர் வீரகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.