இளைஞர் கொலை வழக்கு: 6 பேர் கைது

முன் விரோதம் காரணமாக கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேரை பீளமேடு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

முன் விரோதம் காரணமாக கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேரை பீளமேடு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
கோவை, செளரிபாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ் (20). இவரது நண்பர்கள் கருணாநிதி நகரைச் சேர்ந்த பிரின்ஸ் (23), முருகன் (22). இவர்கள், மே 20-ம் தேதி ஒரே அறையில் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் சதீஷை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது. அந்தச் சமயத்தில் சதீஷைக் காப்பாற்ற வந்த பிரின்ஸ், முருகன் ஆகியோரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பின்டா கார்த்திக், சுமேஷ், சதீஷ்குமார், அகிலன், முரளி, மதன், விபின் ஆகிய 7 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் சுமேஷசைத் தவிர மற்ற 6 பேரையும் பீளமேடு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுமேஷைத் தேடி வருகின்றனர்.
மற்றொரு கோஷ்டியில் இருந்து ரமேஷ் என்ற இளைஞர் சதீஷின் கோஷ்டியில் சேர்ந்துள்ளதால் அவரைத் தேடியே 7 பேர் கொண்ட கும்பல் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளாதாகவும் காவல் துறையினற் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com