மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

பவானியை அடுத்த சித்தோடு, ராயபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 105 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.  

பவானியை அடுத்த சித்தோடு, ராயபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 105 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.  
 இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான கே.சி.பழனிசாமி தலைமை வகித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.பிரபாகரன் வரவேற்றார்.
 இப்பள்ளியில் 105 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை ஈரோடு மேற்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் வழங்கினார். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கு.சிவசங்கர், முன்னாள் மண்டலத் தலைவர்கள் கேசவமூர்த்தி, மனோகரன், முனியப்பன், எவலமலை கூட்டுறவு கட்டடக் கடன் சங்கத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com