நூலக வார விழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட மைய நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் 50-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, மாவட்ட நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
 மாவட்ட நூலக அலுவலர் ந.மணிகண்டன் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.
இதில் மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெ.சுப்பிரமணியன், நாவலாசிரியர் மா.நடராசன், எழுத்தாளர் ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் ஆர்.ரங்கராஜன், இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கற்பகவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com