பள்ளி மாணவி சாவு: இருவரிடம் போலீஸார் விசாரணை

நெகமம் அருகே, ஜான்சி பிரியா என்ற பள்ளி மாணவி இறப்பு வழக்கில் இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெகமம் அருகே, ஜான்சி பிரியா என்ற பள்ளி மாணவி இறப்பு வழக்கில் இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமத்தை அடுத்த செஞ்சேரிப் புதூரைச் சேர்ந்தவர் ஜான்சி பிரியா(17). பெற்றோர்கள் இல்லாததால், பாட்டி கமலா வீட்டில் தங்கிப் பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், ஜான்சிபிரியா தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில்  ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்தார்.
இதில், ஜான்சி பிரியாவின் காதலன் செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இரு இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com