பேராசிரியையிடம் நகைப் பறிப்பு

கோவை, ரத்தினபுரி பகுதியில் தனியாக நடந்து சென்ற தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர்.  

கோவை, ரத்தினபுரி பகுதியில் தனியாக நடந்து சென்ற தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர்.  
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவரது மனைவி பெரியநாயகி (26). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர், பொருள்கள் வாங்க திங்கள்கிழமை மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெரியநாயகி அணிந்திருந்த 5.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில்,அவர்கள் கோவை, ஐஓபி காலனியைச் சேர்ந்த சேகர், மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com