வால்பாறை பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

வால்பாறை பகுதிப் பள்ளிகளில் குழுந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வால்பாறை பகுதிப் பள்ளிகளில் குழுந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறை, தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், பள்ளி சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படடது. வால்பாறையை அடுத்த சோலையார் அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வால்பாறை, எஸ்.எஸ்.ஏ. உண்டு உறைவிடப் பள்ளியில் பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளி சார்பில் இனிப்புகள் வழங்கி போட்டி மூலமாகப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com