சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
சுல்தான் பேட்டையில் இந்துக்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்க முயற்சிப்பதாகவும், இங்கு தேவாலயம் அமைய அரசின் உரிய அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்துக்கள் வாழும் பகுதியில் தேவாலயம் அமைப்பதால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படும்.
எனவே இப்பகுதியில் தேவாலயம் அமைக்கக் கூடாது எனக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.