நகைப் பட்டறையில் திருடிய 3 பேர் கைது: 15 பவுன் பறிமுதல்

கோவை நகைப் பட்டறையில் திருடிய 3 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.  

கோவை நகைப் பட்டறையில் திருடிய 3 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.  
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை,  சுக்கிரவார்பேட்டை சின்ன எல்லை சந்து பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் முரளி.  இவர் பட்டறையைப் பூட்டி விட்டு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியே சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு சுமார் 10 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக  கோவை,  செல்வபுரத்தைச் சேர்ந்த எஸ்.சக்திவேல் (47),  இடையர் வீதியைச் சேர்ந்த ஆர்.ஜண்டு (28),  பேரூர் செட்டிபாளையம் போஸ்டல் காலனியைச் சேர்ந்த எஸ்.தேவ்குமார்(28) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பல்வேறு நகைப் பட்டறைகளில் நகை ஆர்டர் கொடுப்பது போல் நடித்து நோட்டமிட்டு ஆள் இல்லாதபோது திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்கள், ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து நகைப் பட்டறையில் திருடிய 10 பவுன் மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட 5 பவுன் என மொத்தம் 15 பவுன் நகைகளை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com