கோயம்புத்தூர்
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அஞ்சல் துறை சார்பில் முகாம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை முகாம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை முகாம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ராஜேந்திர நகரில் நடைபெற்ற இந்த முகாமை கோவை வடக்கு அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயராஜ்பாபு தொடங்கிவைத்தார். இந்த முகாமில், சேமிப்பு கணக்கு, காசோலை, விபத்து காப்பீடு,
பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஓய்வூதியம் பெறும் திட்டம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்ந்தனர். புதிய சேமிப்புக் கணக்கு தொடங்கியவர்களுக்கு சேமிப்பு புத்தகம், ஏ.டி.எம் அட்டை ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மெயில் ஓவர்சியர் ஆப்ரஹாம் அய்யாதுரை, அஞ்சல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.