அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே அநாதையாக விடப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை மீட்பு

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே அநாதையாக விடப்பட்ட  ஒன்றரை மாதக்  குழந்தையை போலீஸார் புதன்கிழமை மீட்டுள்ளனர்.

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே அநாதையாக விடப்பட்ட  ஒன்றரை மாதக்  குழந்தையை போலீஸார் புதன்கிழமை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, ராமநாதபுரம், கிருஷ்ணா நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே புதன்கிழமை இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த குடியிருப்புக் காவலர் ராஜன் அப்பகுதியில் தேடியதில், ஒன்றரை மாதகாலமேயான பெண் குழந்தை கைப்பையில் சுற்றி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ராஜன் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ராமநாதபுரம் போலீஸார் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு  பிரிவில் சேர்த்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com