மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது கொலை வழக்குப் பதிவு

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபானி. இவரது மனைவி சித்ரகலா. இவர்களுது மகன் பாலமுருகன்(12). சில தினங்களுக்கு முன்னர் பாலமுருகன் காதணி விழாவை ஆடம்பரமாக நடத்துவதற்காக உறவினர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. விழா முடிந்ததும் எதிர்பார்த்த அளவு மொய்ப் பணம் வராததால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்டபானி டெய்லர் வேலைக்காக கர்நாடக மாநிலம் சென்றுவிட்ட
நிலையில் சித்ரகலா பூச்சி மருந்தை தானும் குடித்துவிட்டு மகன் பாலமுருகனுக்கு கொடுத்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், பாலமுருகன் உயிரிழந்தார். சித்ரகலா சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதில், 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக பொள்ளாச்சி தாலூக்கா போலீஸார் தாய் சித்ரகலா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சித்ரகலாவுக்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com