மியான்மரில் இஸ்லாமியர்கள் படுகொலை: மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர ஐக்கிய ஜமாத் பேரவை, ஜமா அத்துல் உலமா சபா மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய ஜமாத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகித்தார்.
அனைத்து இஸ்லாமிய இயக்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது அலி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலர் முகமது அப்பாஸ், எஸ்டிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் அபுதாகீர், மனிதநேய மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலர் கோவை சையது, பள்ளி வாசல் இமாம் முகைதீன் சிராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com