பிஏபி திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட முக்கிய அணைகளின் சனிக்கிழமை நீர்மட்ட நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலையாறு அணை: மொத்த உயரமான 160 அடியில் 119.46 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,268 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 879 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் அணை: மொத்த உயரமான 72 அடியில் 32.90 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,356 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 673 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆழியாறு அணை: மொத்த உயரமான 120 அடியில் 85 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 310 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 304 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை: மொத்த உயரமான 60 அடியில் 46.12 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 761 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 1,213 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அமராவதி அணை: மொத்த உயரமான 90 அடியில் 77.17 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 461 கனஅடி. அணையில் இருந்து விநாடிக்கு 9 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.