காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ சங்கம் சார்பில் கோவை, சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகமது ஹம்ஸா தலைமை வகித்தார். கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.