பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளமடை அருகில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
கோவில்பாளையம் அருகே, வெள்ளானைப்பட்டி அருகே உள்ள செரயம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் சிவபாரதி (23).இவர், சேலத்தில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றுக்காக வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்தவராவார்.
இந்நிலையில், தொட்டிப்பாளையத்தில் டேங்க் தோட்டத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சிவபாரதி ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். இரவில், கணினியில் அவர் கணினியில் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர், திங்கள்கிழமை அதிகாலையில் பார்க்கும்போது வீட்டின் கதவருகே வாயில் நுரையுடன் சிவபாரதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தங்கவேல் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.