பொள்ளாச்சியில் இளைஞர் குத்திக்கொலை: இருவர் கைது

பொள்ளாச்சியில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞர் குத்திக்கொல்லப்பட்டார். 

பொள்ளாச்சியில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞர் குத்திக்கொல்லப்பட்டார். 
 கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆறுமுகா லே-அவுட்டைச் சேர்ந்தவர் பிரதீப் (30). இவரது நண்பர் பாஸ்கர் நகரைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் (29). இருவரும் சேர்ந்து பொள்ளாச்சி ராஜா மில் சாலை அருகே செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் கடையில் வரும் வருவாயைப் பங்கிடுவதில் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. 
மேலும், பிரதீப்பிடம், முகமது அசாருதீன் பணம் கடனாகப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் பிரச்னை இருந்துவந்துள்ளது. 
 இந்நிலையில், பிரதீப்புக்கும், முகமது அசாருதீனுக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. முகமது அசாருதீனுக்கு ஆதரவாக அவரது நண்பரான கோழிக்கடை நடத்திவரும் முகமதுஇப்ராகிம் (41) , பிரதீப்புக்கு ஆதரவாக அவரது உறவினரான மரக்கடை நடத்திவரும் கண்ணன்(30) ஆகியோர் பொள்ளாச்சி சர் சிவி ராமன் வீதியில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
அப்போது ஆத்திரமடைந்த முகமதுஇப்ராகிம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணன் மற்றும் பிரதீப்பை குத்தியுள்ளார். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
படுகாயம் அடைந்த பிரதீப் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மகாலிங்கபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முகமதுஇப்ராகிம் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com