ராவ் மருத்துவமனையின் புதிய கிளை: சரவணம்பட்டியில் 22-ஆம் தேதி திறப்பு

கோவை சரவணம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் புதிய கிளையான கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.

கோவை சரவணம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் புதிய கிளையான கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷா ஆர்.ராவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கடந்த 1953-ஆம் ஆண்டு முதல் கோவையில் பெண்களுக்கு பிரத்யேக மருத்துவ சிகிச்சை அளித்து வரும் ராவ் மருத்துவமனையின் 2-ஆவது கிளையான கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக், சரவணம்பட்டி புரோம்னேட் டவரில் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது.
இந்த மருத்துவமனையை நடிகை பிந்து மாதவி திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். திறப்பு விழாவை முன்னிட்டு மே 7-ஆம் தேதி வரையிலும் இலவச மருத்துவப் பரிசோதனை, கட்டண சலுகையில் அறுவை சிகிச்சைகள், சலுகைக் கட்டணத்தில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் தலைவர் ஆர்.ராவ், இயக்குநர் தாமோதர் ஆர்.ராவ், தீபிகா ஆர்.ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com