அம்பேத்கர் நினைவு தினம்

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே அவரது உருவப்படத்துக்கு

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே அவரது உருவப்படத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 
நிர்வாகி தம்பு தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாரிமுத்து, முத்தமிழ், முருகேசன், தளபதி உள்பட திமுகவினர், தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் பங்கேற்றனர். 
காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சி கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் இருகூர் சுப்பிரமணியம், வழக்குரைஞர் கவி, பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com