கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பணியாற்றும் 24 மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த விழாவில், பேராசிரியர் மீரா சரவணன் வரவேற்றார். பி.எஸ்.ஜி. மருத்துவமனைப் பணியாளர் அலுவலர் கண்ணப்ப நாயனார், உதவிப் பொது மேலாளர் எஸ்.ராமச்சந்திரன், செவிலியர் கல்லூரி முதல்வர் அ.ஜெயசுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு விநாடி - வினா, வாய்ப்பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இணைப் பேராசிரியர் எஸ்.சுதாபிரியா நன்றி கூறினார்.