திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு: மைய நூலகத்தில் 9இல் நடக்கிறது

கோவை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9) நடைபெறுகிறது.

கோவை மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9) நடைபெறுகிறது.
 தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், திருக்குறள் உலகம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்பு காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.
 மாவட்ட நூலக அலுவலர் ந.மணிகண்டன் தலைமையேற்று பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைக்கிறார். மைய நூலகர் பே.ராஜேந்திரன், பே.மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருக்குறள் கி.கணேசன், "திருக்குறள் வாழ்வியல் சிந்தனை' என்ற தலைப்பில் உரை விளக்கம் அளிக்கிறார்.
 இதில், 6 முதல் 15 வயது வரையுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்கலாம் என்று திருக்குறள் உலகம் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com