குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

கோவையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 கோவை, கோட்டைமேடு வின்சென்ட் சாலையைச் சேர்ந்தவர் சுலைமான்மகன் எஸ்.ரியாசுதீன் (23). இவர் மீது ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததை அடுத்து இவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 இந்நிலையில், இவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடியது, கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறித்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின்பேரில் ரியாசுதீன் குண்டர் தடுப்புச்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com