நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மில் பஞ்சு குடோனில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெரிய பாலத்துக்கு அருகே தனியார் மில் உள்ளது. இங்கு நூல் கோன்கள்
உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக குடோனில் பஞ்சு மூட்டைகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சு குடோனில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து நேரிட்டது. பஞ்சு மூட்டைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.