கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட கள்ளிமடை பகுதியில் அத்தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 63-ஆவது கள்ளிமடைப் பகுதிகளில் திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகள், தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர்க்
கால்வாய்கள், பராமரிப்பு இல்லாத பொதுக் கழிப்பறைகள், குப்பை தேங்கியுள்ள இடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் வரவழைத்து அவற்றை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார். இப்பிரச்னைகளை சரி செய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
சிங்காநல்லூர் பகுதி திமுக செயலாளர் எஸ்.எம்.சாமி, வட்டச் செயலாளர் மனோகரன், திராவிடமணி, ஜி.எச்.ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.