அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மறியல் ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் திலகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கங்காதேவி கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில், பிப்ரவரி 15-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வளியுறுத்தி நடைபெறும் மறியல் போராட்டத்தில் அன்னூர் ஒன்றியத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என்று முடிவு செய்தனர்.
இதில், அன்னூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட சத்துணவுப் பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளாளர் நன்றி தெரிவித்தார்.