அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமை

அன்னூர் அருகே வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்த காட்டெருமை ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் புதன்கிழமை தஞ்சமடைந்தது.

அன்னூர் அருகே வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்த காட்டெருமை ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் புதன்கிழமை தஞ்சமடைந்தது.
அன்னூர் அருகே ஓரைக்கால்பாளையத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில்  காட்டெருமை  சுற்றி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம்  வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அங்கிருந்த  காட்டெருமை கடத்தூர் செல்லும் நீர்வழிப் பாதை வழியாக வரதையம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு சென்றது.  இதையடுத்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம்  வனச் சரகர் பழனிராஜா,  வனவர் மாதையன் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் அங்கிருந்த காட்டெருமை பெரியநாயக்கன்பாளையம்  வனப் பகுதிக்குள் விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com