கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
செட்டிபாளையத்தில் உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுப்பிரமணியம் (34). இவர் செட்டிபாளையம்-ஒக்கிலிபாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்