தடையை மீறி ஊர்வலம்:  இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது

கோவையில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற இந்து மக்கள் கட்சியினர் (தமிழகம்) 50 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

கோவையில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற இந்து மக்கள் கட்சியினர் (தமிழகம்) 50 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கோவையில் 1998-ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. எனினும், அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 இதையடுத்து, அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்றதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com