கோவையை அடுத்த க.க.சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ்குமார் தலைமை வகித்தார். விழாவின் ஒருங்கிணைப்பாளர் பெல்லாரோ ஜான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேந்திரன் வாழ்த்திப் பேசினார். கோவை அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் மீனாட்சி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கல் விழாவின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார். இதையடுத்து, ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கோலப் போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.