சிறப்பாக சேவையாற்றிய போலீஸாருக்கு ஜனவரி 20-இல் விருது

சிறப்பாக சேவையாற்றிய 10 போலீஸாருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ஜனவரி 20-ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளது.

சிறப்பாக சேவையாற்றிய 10 போலீஸாருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ஜனவரி 20-ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் ஜனவரி 20-ஆம் தேதி (சனிக்கிழமை)  மாலை 6.30 மணி அளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 
மேலும்,  வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்,  ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் நிரந்தர உறுப்பினர்,  மாநில காவல் துறை புகார் பிரிவு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த டி.டி.ரத்தினசபாபதி பிள்ளையின் தபால் தலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில்,  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி,  கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு,  மூத்த வழக்குரைஞர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com