அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் மர்ம நபர்கள் விஷம் வைத்ததில் 4 வீட்டு நாய்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.
அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையம் எஸ்.சி. காலனியில் குடியுருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீட்டுக் காவலுக்கு நாய்கள் வளர்த்து வருகின்றனர். குடியிருப்பு அருகே கோழிப் பண்ணைகள் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்தப் பகுதியில் 4 வீட்டு நாய்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் இறந்த கோழிகளும் காணப்பட்டன.
இறந்த கோழியில் விஷம் வைத்து நாய்களை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் எனக் கூறி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயராணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.