எலுமிச்சையைத் தாக்கும் புதிய வேர்முடிச்சு நூற்புழு: வேளாண் பல்கலை. எச்சரிக்கை

கோவை, ஈரோடு மாவட்டங்களில் எலுமிச்சை பயிரைத் தாக்கும் புதிய வேர்முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாகி இருப்பதாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் எலுமிச்சை பயிரைத் தாக்கும் புதிய வேர்முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாகி இருப்பதாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இது தொடர்பாக நூற்புழுவியல் துறை பேராசிரியர்கள் பூர்ணிமா, சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 கோவை, ஈரோடு மாவட்டங்களில் அண்மைக் காலமாக எலுமிச்சை செடிகளில் பின்நோக்கி வாடல், இலைகள் மஞ்சளாகி உதிரும் அறிகுறிகள் தோன்றி வருகின்றன. இந்த வகையான செடிகளில் பூக்கள் பூத்து மிகச் சிறிய காய்கள் காய்த்து அவையும் உதிர்ந்து விடுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட செடிகளை ஆய்வு செய்ததில், வேர்களில் சிறிதும் பெரிதுமான முடிச்சுகள் காணப்பட்டன. இந்த முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் பெண் நூற்புழுக்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் மிலாய்டோகைன் இண்டிகா எனும் தனியினம் என்பது தெரிய வந்துள்ளது.
  தமிழ்நாட்டில் முதன் முறையாகக் கண்டறியப்பட்ட இந்த வேர்முடிச்சு நூற்புழுத் தனியினம் பாலாஜி என்ற எலுமிச்சை ரகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாற்றுகளில் இருந்தே இந்த புதிய ரக புழுக்கள் தமிழ்நாட்டில் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  எனவே, உழவர்கள் தங்களது எலுமிச்சைத் தோட்டங்களில் உள்ள எலுமிச்சை மரத்தின் வேர், மண்ணை ஆய்வுக்குள்படுத்தி நூற்புழுத் தாக்கம் உள்ளதா என அறிந்து அதற்கேற்ற வழிமுறைகளைக் கையாள வேண்டும். மேலும், இது குறித்த விவரங்களுக்கு 0422-6611264 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com