ரயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

சூலூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

சூலூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
சூலூர் அருகே மாதப்பூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முகுந்தன். இவர் சூலூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்துவந்தார். 
இந்நிலையில் அவர் வேலைக்கு செல்வதற்காக ரயில்வே  இருப்புப் பாதையை செவ்வாய்கிழமை காலை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ரயில் முகுந்தன் மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com