வால்பாறையில் லோக் அதாலத்: 18 வழக்குகளுக்குத் தீர்வு

வால்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 18 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

வால்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 18 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
வால்பாறை நீதிமன்றத்தில் லோக் அதாலத் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  ஓய்வு பெற்ற நீதிபதி ராமசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,  வால்பாறை யூனியன் வங்கியின் 140 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 
இதில் 18 வழக்குகளுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டதன் மூலம் ரூ. 96 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது.  இதில்,  வழக்குரைஞர்கள் முத்துசாமி,  சுமதி,  வங்கி அதிகாரிகள் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவை சேர்ந்த சுரேஷ்,  பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com